“என்னிடம் இருந்து விலகி இருங்கள்”- சாலையில் சுற்றியவரின் நெற்றியில் எழுதிய பெண் காவலர் !

நாடு முழுவதும் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் சாலையில் சுற்றி திரிந்தவர் நெற்றியில் “நான் வீட்டில் தனிமைப்படுத்துதலை மீறிவிட்டேன், என்னிடமிருந்து விலகி இருங்கள்” என்று பெண்காவலர் ஒருவர் எழுதியுள்ளார். சட்டப்படி அந்த பெண் காவலர் செய்தது தவறு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.