சிகிக்சைக்காக வந்த சிறுவனிடம் சிறுநீரகத்தை திருடிய அரசு மருத்துவர் ..!

சிகிக்சைக்காக வந்த சிறுவனிடம் சிறுநீரகத்தை திருடிய அரசு மருத்துவர் ..!

  • சிறுவன் ஒருவன் சிறுநீரகத்தில் கற்கள் பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனை சென்று உள்ளார் .
  • மருத்துவர்  பிரேம் மோகன் மிஸ்ரா சிறுவனின் சிறுநீரகத்தை திருடி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டம் ஷாகான்ஜ் பகுதியை சேர்ந்த அர்காஷ் என்ற சிறுவனின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததால் அவதி பட்டு வந்து உள்ளான்.
இதை தொடர்ந்து அந்த சிறுவனின் தந்தை அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.

இந்த சிறுவனுக்கு பிரேம் மோகன் மிஸ்ரா என்ற மருத்துவர்  சிகிச்சை அளித்து உள்ளார். ஆனால் ஒரு மாதமாக தீவிர சிகிச்சை கொடுத்ததும் குணமடையவில்லை.இந்நிலையில் சிறுவனின் தந்தை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனின் ஒரு சிறுநீரகம் இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் சிறுவனின் தந்தை தனது மகனின் சிறுநீரகத்தை அரசு மருத்துவர் பிரேம் மோகன் மிஸ்ரா  திருடி விட்டதாக புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube