ஸ்டாலின் போராட்டம் நடத்துவது உதயநிதியை அதிகாரத்திற்கு கொண்டுவரத்தான்-  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஸ்டாலின் போராட்டம் நடத்துவது உதயநிதியை அதிகாரத்திற்கு கொண்டுவரத்தான்-  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

  • திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின்  நியமனம் செய்யப்பட்டார்.
  • ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழகத்திற்காக அல்ல மகன் உதயநிதியை அதிகாரத்திற்கு கொண்டுவரத்தான் என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மக்களவை மற்றும் இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்ர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார்.கடந்த சில நாட்களாக அவரது அரசியல் செயல்பாடு அதிகமாகவே இருந்து வந்தது.  திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின்  நியமனம் செய்யப்பட்டார் . திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்  செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.37 ஆண்டுகாலமாக மு.க.ஸ்டாலின் வகித்த பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் ,திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழகத்திற்காக அல்ல மகன் உதயநிதியை அதிகாரத்திற்கு கொண்டுவரத்தான். எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல் அடுத்தடுத்து போராடுகிறது எதிர்கட்சியாக உள்ள திமுக. பொதுநலத்தை மறந்து சுயநலமாக செயல்படுவதால் மக்கள் ஸ்டாலினுக்கு தோல்வியை தருவார்கள் என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube