“ஸ்டாலினின் பொய்” நான் நீதி மன்றம் செல்வேன் துணை முதல்வர் அதிரடி..!!

சென்னை:

ஸ்டாலின் மீண்டும் பொய் புகார் கூறினால் நீதிமன்றம் செல்வோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை மின்சாரத்துறை அமைச்சர் மறுத்துள்ளார். மீண்டும் பேசினால் நீதிமன்றம் செல்லக்கூடும். எச்.ராஜா என்ன மாதிரி மனநிலையில் பேசி இருக்கிறார் என தெரியவில்லை. அவருக்கெல்லாம் பதிலளிக்க முடியாது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலைக்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உள்ளது.

ஆளுநர் நடவடிக்கையை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இலங்கையில் போர் நடந்தபோது உறுதுணையாக இருந்து இனப்படுகொலைக்கு துணை போன தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து ஏற்கனவே அறிவித்தபடி 25-ந்தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்.40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என தினகரன் கூறிய கருத்து உலக மகா காமெடியாகும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

DINASUVADU 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment