சிறுபான்மை மக்களை அதிமுகவிலிருந்து பிரிக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார்-பன்னீர்செல்வம்

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்தல்  நடைபெறுகிறது.அதிமுக கூட்டணி  சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக  அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகத்தை ஆதரித்து வேலூரில்  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மக்களவை தேர்தலில் திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது என்று தெரிவித்தார் .

மேலும்  சிறுபான்மை மக்களை அதிமுகவிலிருந்து பிரிக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார், அது நடக்காது என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.