ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தா கொல்கத்தாவில் அறிவித்திருக்க வேண்டும் -தமிழக பாஜக தலைவர் தமிழிசை

ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தா கொல்கத்தாவில் அறிவித்திருக்க வேண்டும் -தமிழக பாஜக தலைவர் தமிழிசை

ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், லயோலா கல்லூரியில் நடைபெற்ற கிராமிய கலை விழா, மோசமான சித்திரங்கள் இடம் பெற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது .பெண்களை மிக மோசமாக சித்தரிக்கும் இந்த கண்காட்சியின் வக்கிர புத்தியை பொறுத்துக்கொள்ள முடியாது.ஸ்டாலின் எதுக்கு எடுத்தாலும் கருத்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். இயல்பான விஷயத்திற்கு கூட உள்நோக்கம் கற்பிக்கிறார் ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும்  என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *