தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்த ஸ்டாலின்….!!

தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்த ஸ்டாலின்….!!

  1. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு  தொகுதி பங்கீடு முடிவாகியுள்ளது.
  2. தொகுதி பங்கீடு குழுவினரை சந்தித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும் , முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் திமுக கட்சியின் தோழமை கட்சிகளாக இருக்கும் சிபிஎம் , சிபிஐ , விசிக,மதிமுக ஆகிய கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தோழமை கட்சிகள் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடிந்த நிலையில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *