திமுக கூட்டணி குறித்து கவலைப்படாமல் அதிமுக கூட்டணி பற்றி ஸ்டாலின் பேசி வருகிறார்- அமைச்சர் வேலுமணி

  • மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பாமக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சு நடைபெற்றது.
  • அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
  • பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
  • திமுக கூட்டணி குறித்து கவலைப்படாமல் அதிமுக கூட்டணி பற்றி ஸ்டாலின் பேசி வருகிறார் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  திமுக 20 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறும். ஆனால் அதிமுக, பாஜக மற்றும் பாமக உடன் கூட்டணி அமைத்து அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.திமுக கூட்டணி குறித்து கவலைப்படாமல் அதிமுக கூட்டணி பற்றி ஸ்டாலின் பேசி வருகிறார்.வைகோ ஸ்டாலினை பற்றி பேசாததா? ஆனால் அவருடன் கூட்டணி வைத்துள்ளார் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment