நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வேன்-ஸ்டாலின்

நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வேன்-ஸ்டாலின்

நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது .விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.அதேபோல் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அக்டோபர் 9, 10 மற்றும் 15,16 தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வேன். காங்கிரஸ் சார்பாக நாளை (அதாவது இன்று )அல்லது நாளை மறுநாள்(நாளை ) அமைக்கப்படும் தேர்தல் பணிக்குழுவுடன் திமுக இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube