தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்- தமிழிசை

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான் . மழைநீர் சேமிப்பு முறையை அனைவரும் செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் மேகமூட்டமாக உள்ளது, இது யாகத்தால் ஏற்பட்டு உள்ளது.ஸ்டாலின் அவர்கள் குடம் இங்கே தண்ணீர் எங்கே என்று ஆர்ப்பாட்டம் நடத்திகிறார்.ஊழலால் ஆட்சியை இழந்தது திமுக.மழை நீர் சேகரிப்பு உடனே அரசு அலுவலங்களில், அனைத்து இடங்களில் நடைமுறை படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.