ஸ்டாலின் விமர்சனம் செய்தது சிறுவன் மீதான அக்கறையால்தான் -டி.கே.எஸ்.இளங்கோவன்

ஸ்டாலின் விமர்சனம் செய்தது சிறுவன் மீதான அக்கறையால்தான் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  சுஜித் மீட்பு பணி குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்தது சிறுவன் மீதான அக்கறையால்தான், அரசியல் செய்வதற்கு இல்லை.
4 நாட்களாக ஸ்டாலின் அங்கு செல்லாமல் இருந்ததே அரசியல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.ஆனால்  அதன்பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றதால்தான் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார் என்று தெரிவித்தார்.