ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது- துணை முதல்வர் பன்னீர்செல்வம் பரப்புரை

ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது- துணை முதல்வர் பன்னீர்செல்வம் பரப்புரை

ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம்  பரப்புரை மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது.அவருக்கு யோகம் இல்லை .கல்விக்காக தமிழகத்தை போல் எந்த மாநிலங்களிலும் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியதில்லை என்று தெரிவித்தார்.

Join our channel google news Youtube