இலங்கை கடற்படையால் 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது !

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுத்தீவிற்கு இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர்.
பின்னர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, 4 விசைப்படகுகளை மறித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 16 மீனவர்களையும் கைது செய்து கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
4 படகுகளுடன் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம், தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான பூண்டி என்பவருக்கு நோய் உள்ளதால், அவரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்…

Leave a Comment