கோவிந்தா கோஷத்தில் பவனி வரும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ..!தை தேர் திருவிழா இந்நாளில்..!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழாவானது  கடந்த 12 தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியது.தினமும் காலை மற்றும் மாலை வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்து வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் தேரோட்டமானது  நாளை காலை நடைபெறுகிறது.

சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரானது  நான்கு உத்திர வீதிகளில் கோவிந்தா கோஷத்தில்  பவனி வருகிறது .

இதனை தொடர்ந்து 21 தேதி சப்தாவரணம் நிகழ்ச்சியானது நடைபெறுகிறது.விழா நிறைவு நாளான 22 தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள் வீதிகளில் வலம் வந்து அருட்காட்சி அருளுகிறார்.

author avatar
kavitha

Leave a Comment