இலங்கை அதிபர் தேர்தல் ! பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

இலங்கை அதிபர் தேர்தல் ! பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது .
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.மொத்தமாக 12,845 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் 1 கோடியே 59 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச உட்பட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.மேலும் இலங்கையில் தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube