பாகிஸ்தானில் தீவிர வலை பயிற்சியில் இலங்கை வீரர்கள்..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி கராச்சி மைதானத்தில் இரு அணிகளும் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டி மழையால் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.


இதைதொடர்ந்து இன்று இரண்டு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி நடைபெற  உள்ளது. இந்த போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இலங்கை அணி தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
murugan