இலங்கை அரசு நடவடிக்கை- தமிழக மீனவர்கள் 20 பேர் விடுவிப்பு…!!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 20 பேரை அந்நாட்டு மத்திய அரசு விடுவிக்க உள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த 129 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 109 மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில்,அவர்களுடன் கைது செய்யப்பட்ட மேலும் 20 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்ற நடைமுறை நடவடிக்கைகளுக்கு பின்னர், தமிழக மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment