ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லாதபோது தீ விபத்து..! உயிர் பிழைத்த மனைவி , குழந்தை ..!

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை  உச்சநீதிமன்றம் நீக்கியது. பின்னர் நீதிபதி டி .கே ஜெயின் 7 ஆண்டுகள் தடை விதித்தார். இதை அடுத்து அடுத்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி உடன் தடை முடிவடைகிறது.

இந்நிலையில் கேரளா கொச்சினில் ஸ்ரீசாந்த் வீடு உள்ளது. திடீரென இன்று அதிகாலை 2 மணிஅளவில் அவரது வீட்டின் படுக்கையறை மற்றும் வரவேற்பு அறையில் தீ பிடித்தது.

தீயணைப்பு துறைக்கு  உடனடியாக  தகவல் கொடுக்கப்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைந்தனர். வீட்டில் தீ பிடித்தபோது ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லை , அவரது மனைவியும் , குழந்தை மட்டுமே இருந்து உள்ளனர்.

தீயை உடனடியாக அணைத்ததால் அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர்.தீ எப்படி பிடித்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan