தேர்தல் ஆணையத்தில் பிளவு ! ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை -தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம்

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது.இதில் 6-கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.நாளை 7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

ஆனால் தேர்தல்  பரப்புரைகளில் பிரதமர் மோடி,பாஜக தலைவர் அமித்ஷா தேர்தல் விதியை மீறி பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் பல புகார்கள் அளித்தது.ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தப்பாடில்லை.

தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதியுள்ளார்.அதில்,பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில்  அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை  என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment