பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்- முதலமைச்சர் பழனிசாமி

பொதுமக்களின் நீண்ட நாள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகண்டு வருகிறோம். பொதுமக்களின் நீண்ட நாள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி வருகிறது.முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்தின் கீழ் 28,777 பெண்கள் பயனடைந்துள்ளனர் என்று பேசினார் முதலமைச்சர் பழனிசாமி.