3 எம்எல்ஏக்களுக்கு 185 பக்கத்தில் நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர்!

அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த 185 பக்கங்கள் கொண்ட நோட்டீஸில் பல்வேறு மாநிலங்களில்  கட்சி தாவலில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ்  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் , பல்வேறு வழக்குகள் உள்ளனர்.

மேலும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு 7 நாட்களில்  எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தினகரனுடன் இணைந்து பிரசாரம் செய்ததாக 4 படங்கள் ஆதாரமாக இணைக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan

Leave a Comment