குடியரசுதின விழாவில் பங்கேற்ற தென்னாப்பிரிக்க அதிபர்…!!

இந்திய 70_ஆவது குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா பங்கேற்றார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். இதையடுத்து  இன்று நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க நேற்று டெல்லி விமான நிலையம் வந்த தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் அவரது மனைவி_க்கு அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.    இந்நிலையில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் அவரது மனைவி_க்கு இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்று நாட்டின் 70-வது குடியரசு தினவிழா உற்சாகத்துடன்  நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காலை டெல்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள்,  ஜோதி என 21 குண்டுகள் முழுங்க, தேசிய கொடி ஏற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கோடியை ஏற்றினார். இதில்  சிறப்பு விருந்தினர் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம போசா கலந்து கொண்டார்.

இதில் பிரதமர் மோடி,அமைச்சர்கள் என பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.அணி வகுப்பு மரியாதை நடைபெற்ற பகுதியைச் சுற்றி 8 கிமீ சுற்றளவில்  பாதுகாப்புபடையினர் தீவிர கண்காணிப்பில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். விமானப்படையில் உள்ள விமானங்களும் வானில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment