மருத்துவருடன் இந்தியா வந்த தென்ஆப்பிரிக்கா அணி..!

வருகின்ற 12-ம் தேதி இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையில் தென்ஆப்பிரிக்க  அணி நேற்று அதிகாலை டெல்லி விமான நிலையம்  வந்தடைந்தனர்.

பின்னர் அங்கிருந்து  முதல் போட்டி நடைபெறும் தர்மசாலாவுக்கு சென்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 42 பேருக்கு மேல்பத்திக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியினருடன் டாக்டர் சுயப் மஞ்ச்ரா இந்தியா வந்துள்ளார்.இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டி  15-ம் தேதி லக்னோவிலும் , கடைசி போட்டி 18-ம்  தேதி கொல்கத்தாவில் நடை[பெறவுள்ளது.

 

author avatar
murugan