ஜம்மு-காஷ்மீர் பயகங்கரவாத தாக்குதலில் பாஜாகவினர் மூவர் பலி

ஜம்மு-காஷ்மீர் பயகங்கரவாத தாக்குதலில் பாஜாகவினர் மூவர் பலி

ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாஜகவின் இளம் தலைவர்  உட்பட 3 வர் பலி.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜாகாவின் இளம் தலைவர் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்று ( வியாழக்கிழமை ) ஒய்.கே.போரா கிராமத்தில் காரில் சென்றுக்கொண்டிருந்த பொழுது வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிசூட்டில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழக்க மற்ற இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்  .இந்த தாக்குதலுக்கு காரணம் பயங்கரவாதிகள் தான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்  அதற்கான விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தேசிய மாநாட்டுத் தலைவர் உமர் அப்துல்லா மற்றும் பி.டி.பி தலைவர் மெஹபூபா முப்தியும் தங்களது கண்டங்களை தெரிவித்துள்ளனர்.

author avatar
Castro Murugan
Join our channel google news Youtube