சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு புதிய நிறுவனத்தை தொடங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

  • சூப்பர் ஸ்டாரின் 69வது பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 
  • அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகள் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளனர். இதனை கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இவரது 168வது பட பூஜா இன்று போடப்பட்டது.

இன்று ரஜினியின் மூத்த மக்களும் சினிமா இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது புதிய பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதற்கு மே 6 என்டர்டைன்ட்மென்ட் என பெயரிட்டுள்ளார். இதன் மூலம் ஆன்லைன் வெப் சீரிஸ் எடுத்து அதனை எம்.எக்ஸ் பிளேயரில் வெளியிட உள்ளார்.

முதற்கட்டமாக பொன்னியின் செல்வன் கதையினை வெப் சீரிஸாக எடுக்க உள்ளார். இந்த வெப் சீரிஸிற்கு தயரிப்பாளர் மற்றும் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் சொந்தர்யா ரஜினிகாந்த் பணியாற்ற உள்ளார். சூர்யா பிரதாப் என்பவர் இதனை இயக்க உள்ளார். விரைவில் அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.