காங்கிரஸ் வேட்பாளரை சோனியாகாந்தி முடிவு செய்வார்-நமச்சிவாயம்

புதுச்சேரி காமராஜ் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை சோனியாகாந்தி முடிவு செய்வார் என்று அம்மாநில தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையொட்டி  காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் , பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் விருப்பமனு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் இது குறித்து கூறுகையில்,புதுச்சேரி காமராஜ் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை சோனியாகாந்தி முடிவு செய்வார் .செப்டம்பர் 25-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமியுடன் டெல்லி சென்று வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும் .அதிமுக, பாஜக சார்பில் யார் நின்றாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.