குடும்பம் நடத்த வராததால் மனைவி , மாமியாரை கத்தியால் குத்திய மருமகன்

குடும்பம் நடத்த வராததால் மனைவி , மாமியாரை கத்தியால் குத்திய மருமகன்

  • கல்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வராசு, ஜெயந்தி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
  • இதையெடுத்து செல்வராசு ,ஜெயந்தியிடம்  தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு கூறியுள்ளார். ஜெயந்தி மறுப்பு தெரிவித்தால் செல்வராசு கத்தியால் குத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்  உள்ள ஆரணியை அடுத்த கல்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (கூலி தொழிலாளி). இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயந்தி பிரிந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதையெடுத்து தனது மாமியார் வீட்டுக்கு சென்ற செல்வராசு தனது மனைவி ஜெயந்தியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு கூறியுள்ளார்.

ஆனால் ஜெயந்தி மறுப்பு தெரிவித்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் கோபமடைந்த  செல்வராசு தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜெயந்தியை குத்தியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயந்தி தாய் விஜயா தடுக்க வந்து உள்ளார்.அவரையும் கத்தியால் செல்வராசு குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையெடுத்து காவல் நிலையத்தில்  செல்வராசு சரணடைந்தார்.அவரிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube