தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இறந்த தாயாரின் உடலை தானமாக வழங்கிய மகன்….!!! குவியும் பாராட்டுக்கள்….!!!!

நெல்லை மண்டலா திராவிட கழக தலைவர் பால் ராஜேந்திரனின் மனைவியும், தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரனின் தாயார் கஸ்தூரி பாய் காலமானார். இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன் உயில் எழுதி வைத்துள்ளார்.

அந்த உயிலில், தனது உடலை புதைக்க கூடாது என்றும், தான் இறந்த பின் உடலை மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களின் ஆய்வுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் எழுதியுள்ளார். தாயாரின் விருப்பப்படி பயிற்சி மருத்துவர்களின் ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அவரது உடலை ராஜேந்திரன் ஒப்படைத்துள்ளார்.

இவரது இந்த செயல் மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே பரவியுள்ளது. இந்த செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment