தேவர் ஜெயந்தி : தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர்!

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர். 

 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஜெயந்தி விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுர மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில், அவரது பிறந்தநாள் விழாவானது, தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் கலந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின், அங்கு இருந்த தேவரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.