கோலி_க்கு இவ்வளவு தலைக்கனமா…? இந்திய அணியின் எதிர்காலம் கேள்விக்குறி…!!

  • ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது  டி20 போட்டியில்  ஆஸ்திரேலிய அணி  வெற்றி பெற்றது.  
  • இந்த போட்டியின் போது கோலி அருகில் இருந்த ரோஹித் ஷர்மாவை கண்டுகொள்ளாமல் போனது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது  டி20 போட்டி இன்று  நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை  தேர்வு செய்தார்.இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 126 ரன்கள் சேர்த்தது.அதிரடியாக ஆடிய ராகுல் 10 ஓவர்களின் முடிவில் 31 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

https://twitter.com/TFC_Off/status/1099732860720668672

இந்த போட்டியில் இந்திய அணி பந்து வீசும் போது கேப்டன் விராட் கோலி பந்துவீச்சாளர் பும்ராஹ்_விற்கு ஆலோசனை வழங்கினார்.அப்போது அருகில் இருந்த துணை கேப்டன் ரோஹித் சர்மாவை கண்டுகொள்ளாமல் சென்றது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி மீது இதே போல ஏராளமான விமர்சனங்கள் இருந்தாலும் தற்போது அது மைதானத்தில் வெளிப்பட்டுள்ளது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ_வை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி கோலிக்கு கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர் இணையதளவாசிகள்..

author avatar
Dinasuvadu desk

Leave a Comment