பல்வேறு திருட்டில் ஈடுபட்ட பலே திருடனை தனிப்படை அமைத்து பிடித்த வட சென்னை எம்.கே.பி நகர் காவல்துறை….

பல்வேறு திருட்டில் ஈடுபட்ட பலே திருடனை தனிப்படை அமைத்து பிடித்த வட சென்னை எம்.கே.பி நகர் காவல்துறை….

சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு மருந்து கடை ஒன்றில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது, பல்வேறு இடங்களில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை செய்ததாக காவல்துறையினரின் விசாரணையில் லொட்டை மதன் என்ற திருடன் ஒப்புக்கொண்டுள்ளான். வடசென்னையின் பிரதான  பகுதிகளான புளியந்தோப்பு, எம்.கே.பி நகர், ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பது போன்ற தொடர் திருட்டு சம்பவங்கள்  நடைபெற்று வந்தவன்னம் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எம்.கே.பி நகர் காவல் உதவி ஆணையர் திரு. ஹரிகுமார் அவர்கள், தனிப்படை ஒன்றை அமைத்து குற்றம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை வைத்து அந்த குற்றவாளியை தேடி வந்தனர்.

ஒரே வாரத்தில் 6 இடங்களில் தொடர் ...

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேடுதல் வேட்டையில், சென்னை ஓட்டேரி  சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த மதன் என்கிற லொட்டை மதனை (19) தனிப்படை காவல்துறையினர்  கையும் களவுமாக பிடித்தனர். காவலர்கள் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னையில்,  பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி, எம்கேபி நக,ர் வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனது திருட்டை அரங்கேற்றியுள்ளதாக ஒப்புக்கொண்டார். இந்த திருட்டுகளை தனியாகவும் தன், நண்பர்களோடும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் தாக்கியும் செல்போன் மற்றும் பணத்தை பறித்து வந்ததது தெரிய வந்தது. அதேபோல சென்னை வியாசர்பாடியில் உள்ள மருந்து கடை ஒன்றின்  பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை அவர்  செய்ததாக விசாரணையில் லொட்டை மதன் ஒப்புக்கொண்டார்.

ஒரே வாரத்தில் 6 இடங்களில் தொடர் ...

மேலும், இவர் மீது வட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் ஒன்பதுக்கும் மேற்பட்ட கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இவரிடமிருந்து உயர் ரக திருட்டு இருசக்கர வாகனம், மூன்று கத்திகள், பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் ரொக்கப்பணம் 7 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.மேலும் இவருக்கு திருட்டில் உதவிய லொட்டை மதனின்  நண்பரான இட்டா விஜய் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube