சுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளர் !கொன்றவருக்கும், கொலை செய்ய உத்தரவிட்டவருக்கும் மரணதண்டனை உறுதி -ஸ்மிருதி இரானி

மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார். ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுரேந்திரசிங் என்பவர் அமேதியில் வீட்டிலே தூங்கி கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உதவியாளர் சுரேந்தர் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்றார் ஸ்மிருதி இரானி.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்மிருதி இரானி.அப்போது அவர் கூறுகையில், உதவியாளர் சுரேந்திரசிங் கொலை தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் .எனது உதவியாளரை கொன்றவருக்கும், கொலை செய்ய உத்தரவிட்டவருக்கும் மரணதண்டனை வாங்கி தருவோம் என்று ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

Leave a Comment