ஆறுமாதமாக பூட்டப்பட்டிருந்த வீட்டை திறந்த போலீசார்! காத்திருந்த அதிர்ச்சி!

ரஸ்யாவின் தலைநகர் மாஸ்க்கோவில், ஒரு குடியிருப்பு நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த குடியிருப்பில் இருந்த துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும், நாளுக்குநாள் ஈக்களின் தொல்லையும் அதிகமாகியுள்ளது.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை திறந்துள்ளனர். திறந்து பார்த்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி என்னவென்றால், அந்த வீட்டிற்குள் ஆண் சடலம் ஒன்று  சிதைந்த நிலையில் கிடந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அந்த ஆண் அலெக்சாண்டர் என்றும், அவர் 6 மாதங்களும் முன்பு இறந்திருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அலெக்சாண்டர் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அவரது தாயார் 6 ஆண்டுகளுக்கு முன்பதாகவே இறந்து விட்டதாகவும், அப்பகுதி மக்களுடன் அவர் அதிகமாக பேசுவதில்லை என்றும், அவரை வெளியில் காண்பதே அரிதாக இருக்கும் என்றும் அலெக்சாண்டர் குறித்து தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.