பல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் சிவந்தி ஆதித்தனார் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

பல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் சிவந்தி ஆதித்தனார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் ,பல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் சிவந்தி ஆதித்தனார்.அழகும் அமைதியும் ஒருங்கே குடிகொண்ட நகரம் திருச்செந்தூர்.திருச்செந்தூரின் சிறப்புகளுக்கு மேலும் சிறப்பாக அமைந்துள்ளது மணி மண்டபம்.தொழிலாளர்களுடன் தொழிலாளியாக பணியாற்றியவர் பா.சிவந்தி ஆதித்தனார்.பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது என்று பேசினார்.