சிவகாசி சிறுமி வன்கொடுமை வழக்கு.! சிறுமியின் பெற்றோர் நேரில் ஆஜராக உத்தரவு .!

சிவகாசி சிறுமி வன்கொடுமை வழக்கு.! சிறுமியின் பெற்றோர் நேரில் ஆஜராக உத்தரவு .!

  • சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தை சார்ந்த கிருத்திகாவை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
  • கிருத்திகா பெற்றோர் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதையெடுத்து வருகின்ற 26-ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
கிருத்திகா என்ற சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கிருத்திகா பெற்றோர் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து வருகின்ற 26-ம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் விசாரணை காவல் அதிகாரி ஆகியோர் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தை சார்ந்தவர் சுந்தரம். இவருக்கு 8 வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்தார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார். கடந்த மாதம்  20-ம் தேதி கிருத்திகா பள்ளி முடிந்து விட்டு மாலை வீடு திரும்பிய சிறுமி இயற்கை  உபாதைகள் கழித்துவிட்டு வருவதாக கூறி  சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கிருத்திகா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையெடுத்து அடுத்த மருநாள் கிருத்திகா வீட்டின் அருகே உள்ள முட்புதரில் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube