முழுக்க முழுக்க இரவில் வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’!

  • சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து டாக்டர் எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. 
  • இந்த படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். 

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் ஹீரோ படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இடையே அடுத்த பட ஷூட்டிங்கிலும் சிவா கலந்து கொண்டு வருகிறார்.

அந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். இவர் இயக்கும் இந்த படத்திற்கு டாக்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் மருத்துவ துறையில் நடக்கும் பிரச்னைகள் பற்றி படம் பேசும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் இரவு வேலைகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். அதனால், க்ரைம் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் படமாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.