சிவகாத்திகேயன் திரைப்படம் வெளியாக இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

சிவகாத்திகேயன் திரைப்படம் வெளியாக இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தை வெளியிட கூடாது என  டி.எஸ்.ஆர் படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில், 24ஏ.எம் நிறுவனம் 10 கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளதாகவும், அதனை திருப்பி செலுத்தாமல் ஹீரோ படத்தை வெளியிட கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து, அந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற நடுவர் மன்றம் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தார்.
ஹீரோ படத்தை தயாரித்து வருவது கே.ஜே.ஆர் ஸ்டூடியோ நிறுவனம் தான்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube