சியாச்சின் பனிச்சரிவு: ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு..!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராணுவ வீரர்கள் முகாம் உள்ளது. நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் முகாமிற்கு அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 8 வீரர்கள் வரை சிக்கியிருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்களை மீட்புக்குழுக்கள் மூலம் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

author avatar
murugan