#BIGNEWS: பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கோரோனோ தொற்று உறுதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது, இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அபிசேஷக், ஐஸ்வர்யா உள்பட பல சினிமா நடிகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

அந்த வகையில் தமிழ் திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதனால் அவர் கொரோனா பரிசோதனையை  மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இதனால் சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.