முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

முதலமைச்சர் பழனிச்சாமி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில் நேற்று இங்கிலாந்து நாட்டிற்கு சென்றார்.இன்று  சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட 2 புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தானது .மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி தரத்தினை மேம்படுத்திடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தவும், அந்த வகையான நோய்களை  கையாளும் முறைகளை அறியவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.