சாய் சேகர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த அக்.11ம் தேதி திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் “அருவம்”. இப்படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் திரேசா நடித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சித்தார்த் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் உணவில் உள்ள கலப்படத்தை எடுத்து கூறும் வகையில் உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் வரும் காட்சி ஒன்றில் ‘இந்த கம்பெனி விற்கும் தண்ணீரை குடித்தால் 40 லட்சம் வியாதிகள் வரும்’ என சித்தார்த் தண்ணீரில் உள்ள கலப்படத்தை எடுத்து கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/B3o2bDwBWsp/?igshid=1llux9q5w33lp