சென்னைக்கு 217 ரன்களை நிர்ணயித்த ராஜஸ்தான்.!

சென்னைக்கு 217 ரன்களை நிர்ணயித்த ராஜஸ்தான்.!

இன்று ஐபிஎல் டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்மித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ஜெய்ஸ்வால் 6 ரன்னில் வெளியேறினர். பின்னர், இறங்கிய சஞ்சு சாம்சன் , ஸ்மித் இருவரும்  கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 19 பந்தில் அரைசதம் விளாசினார். பின்னர், சஞ்சு சாம்சன் 74 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இதைதொடர்ந்து, தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மித் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் குவித்தார். பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். கடைசியாக களமிறங்கிய  ஆர்ச்சர் 8 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளனர். 217 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube