ஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..!

விஜய் ஹசாரே தொடர் வரும் 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் 25-ம் தேதி வரை நடைபெற  உள்ளது .இந்த தொடரில் இந்தியாவிலுள்ள 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் விஜய் ஹசாரே தொடரில் கலந்து கொள்ளும் மும்பை அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 அரைசதம் விளாசி இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தார்.

கடந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடர்களில் சரியாக விளையாடாத சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும்  நியமிக்கப்பட்டுள்ளார்.

author avatar
murugan