லண்டனில் போககூடாத இடத்திற்கு சென்ற ஸ்ரேயா..! வளைத்து பிடித்த போலீசார்..!

  • சண்டக்காரி”.இப்படத்தின் படப்பிடிப்புகள் லண்டன் விமானநிலையத்தில் நடைபெறுகிறது. அப்போது ஸ்ரேயா  யாரும் செல்ல அனுமதி இல்லாத இடத்திற்கு சென்று உள்ளார்.
  • பின்னர் போலீசார் எந்த பகுதிக்கு வரக்கூடாது ..? நீங்கள் எப்படி வரலாம்..? என கேள்வி மேல் கேள்வி எழுப்பினர்.

இயக்குனர் ஆர்.மாதேஷ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் “சண்டக்காரி”.இப்படத்தில் நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா ஆகியோர் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் நடைப்பெற்று வருகிறது.

இப்படத்தின் சில காட்சிகள் லண்டனில் உள்ள விமானநிலையத்தில் படமாக்கப்படுகிறது. இதற்காக  படக்குழுவினர் விமான அதிகாரிகளிடம் அனுமதி பெற்று திரைப்படத்தை படமாக்கி வருகின்றனர்.லண்டன் விமான நிலையத்தில் சில பகுதிகளுக்கு பொதுமக்கள் உட்பட யாரும் செல்ல அனுமதி கிடையாது.அந்த பாதுகாப்பு பகுதியில் போலீசார் துப்பாக்கி உடன் எப்போதும் இருப்பார்கள்.

இந்நிலையில் அந்த பாதுகாப்பு பகுதிக்கு தெரியாமல் நடிகை ஸ்ரேயா சென்று விட்டார்.இதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக  துப்பாக்கி உடன் இருந்த போலீசார் ஸ்ரேயாவை பார்த்து யாரும் எந்த பகுதிக்கு வரக்கூடாது ..? நீங்கள் எப்படி வரலாம்..? என கேள்வி மேல் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கமுடியாமல் ஸ்ரேயா பதட்டத்தில் இருந்தார். பின்னர் அங்கு வந்த படக்குழுவினர் தாங்கள் படப்பிடிப்பிற்காக வந்து உள்ளதாகவும் ,இவர் படப்பிடிப்பு குழுவினர்களில் ஒருவர் என விளக்கம் கொடுத்து உள்ளனர்.பின்னர் போலீசார் ஸ்ரேயாவையும் ,படக்குழுவினரையும் எச்சரித்து அனுப்பினார்.

 

 

author avatar
murugan