அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு! அதிபர் ட்ரம்பின் பத்திரிகையாளர் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தம்!

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் அடிக்கடி செய்தியாளர் சந்திப்பில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் அதிபர் ட்ரம்ப்  குறித்து, செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட போது, வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, ட்ரம்பின் பாதுகாவலர்கள், செய்தியாள சந்திப்பில் இருந்து பாதியிலேயே, அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.

சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கப்படும் வகையில் நடந்து கொண்ட மர்மநபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து துப்பாக்கி சூட்டிற்கு ஆளான மர்மநபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.