கமலிடம் பிடிபட்ட அடுத்த காதல் ஜோடி இவர்கள் தானா !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 3 வது சீசனில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் மோகன்  வைத்தியா வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் கமல் நேற்று பிராங்க் என்று கூறி மோகன் வைத்தியா காப்பாற்ற பட்டதாக அறிவித்தார்.

இது பலரும் மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.இது ஒரு புறமிருக்க ஏற்கனவே அபிராமியும் கவினும் காதலிப்பதாக பல தகவல்கள் வெளியானது பின்பு கவின் சாக்ஷியை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.கவினுக்கு லாஸ்லியா மீதும் ஒரு கண் இருக்கிறது. தற்போது  தர்சன் மீராவிடம் தன்னுடைய காதலை சொல்லிவிட்டார் என பல தகவல்கள் பரவி நிலையில் கமல் காதிலும் இந்த விஷயம் சென்றுள்ளது. இது குறித்து கேட்டபோது தர்சனும் மீராவும் இதனை மறுத்து விட்டார்கள். பின்பு கமல் கவின் பக்கம் சென்றுள்ளார். இதோ அந்த ப்ரோமோ