திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழக பிரதிநிதியாக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழக பிரதிநிதியாக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் சார்பில் தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை மீண்டும் நியமித்தது ஆந்திர அரசு. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் சேகர் ரெட்டி நீக்கப்பட்டிருந்தார்.இதனையடுத்து தற்போது மீண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழக பிரதிநிதியாக சேகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.