3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீக்‌ஷித் நிர்வாகத் திறமைமிக்கவர் என பாராட்டப்பட்டவர்-மு.க.ஸ்டாலின்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்‌ஷித் காலமானார்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,  டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் காலமானார் என்ற துயரச்செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். 3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீக்‌ஷித் நிர்வாகத் திறமைமிக்கவர் என பாராட்டப்பட்டவர் .டெல்லி வளர்ச்சி, மாநில மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றினார் என்று தெரிவித்தார்.