தந்தையின் சிகிக்சைக்காக சென்னை சென்ற பேரறிவாளன்.!

  • பேரறிவாளன் தற்போது பரோலில் உள்ளார்.
  • குயில்தாசன் உடல்நிலை மோசமானதால் ஜோலாா்பேட்டை போலீஸாா் பாதுகாப்புடன் பேரறிவாளன் சென்னை சென்றார்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.இந்நிலையில் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பேரறிவாளன் தாய் ஒரு மாதம் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இதையெடுத்து நவம்பா் 12-ம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் கொடுக்கப்பட்டது.பின்னர் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல் நலக்குறைவு அதிகரித்ததால் மீண்டும் ஒரு மாதகாலம் பரோல் கொடுக்கபட்டது.

இந்நிலையில் குயில்தாசன் உடல்நிலை மோசமானதால் நேற்று வாணியம்பாடி மகளிா் காவல் ஆய்வாளா் நிா்மலா தலைமையில் ஜோலாா்பேட்டை போலீஸாா் பாதுகாப்புடன் பேரறிவாளன் ,அவரது தந்தை குயில்தாசன் ஆகியோரை சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பேரறிவாளனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதால் அதனால் தான் அவரையும் அழைத்து செல்வதாக போலீஸாா் கூறினர்.

 

 

author avatar
murugan