கணவரை சாப்பிட்ட சுறா..! திருமண மோதிரம் மூலம் மனைவி அடையாளம்..!

கணவரை சாப்பிட்ட சுறா..! திருமண மோதிரம் மூலம் மனைவி அடையாளம்..!

மடகாஸ்கருக்கு 500 கி.மீ தொலைவில் ரீயூனியன் தீவு உள்ளது.இந்த தீவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம்.ஆனால் இங்கு உள்ள கடற்கரையில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள்  தயங்கி வருகின்றனர்.
காரணம் இங்கு சுறா மீன்கள் சுற்றி கொண்டு இருக்கின்றனர். மனிதர்களை தாக்கக்கூடிய நான்கு சுறா மீன்களை கொன்று விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனாலும் இன்னும் ஒரு சில சுறா மீன்கள் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி தனது மனைவியின் 40-வது பிறந்தநாளைக் கொண்டாட இங்கு வந்து உள்ளார்.அப்போது இந்த தம்பதி கடற்கரையில் குளித்து கொண்டு இருக்கும் போது தனது கணவர் காணவில்லை என போலீசாரிடம் கூறியுள்ளார்.
போலீசாரே கொன்ற ஒரு சுறா மீனின் வற்றில் ஒரு கை இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த கையில் ஒரு மோதிரம் இருந்தது. பின்னர் தனது கணவரை காணாமல் போனதாக கூறியவரிடம் போலீசார் கையை காட்டி இது உங்க கணவரின் கை தானா என கேட்டனர்.
அதற்கு ஆமாம் கையில் உள்ள மோதிரம் எங்கள்  திருமண மோதிரம் என கூறினார்.பின்னர் டி.என்.ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன  அதில் அந்த பெண்ணின் கணவர் என்பது உறுதியானது.சுறா மீன் அவரை உயிருடன் கொன்றதா..? இல்லை தண்ணீரில் மூழ்கி இறந்த பின் தின்றதா என்பது எல்லாம் பரிசோதனைக்கு பிறகு தெரியும் என போலீசார் கூறியுள்ளனர்.
 
 

author avatar
murugan
Join our channel google news Youtube